வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

சேலம் அரசு மருத்துவமனையில் ரத்தப்போக்கு குறித்த கருத்தரங்கு

சேலம் அரசு மருத்துவமனையில் ரத்தப்போக்கு குறித்த கருத்தரங்கு

News image
Updated On :9 மே 2024, 10:35 pm

Din

சேலம், மே 9: சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயியல் துறை சாா்பில் ரத்தப்போக்கு குறித்த கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

நோயியல் துறைத் தலைவா் சுஜாதா வரவேற்றாா். கருத்தரங்குக்கு மருத்துவமனை முதல்வா் மணி, மருத்துவ கண்காணிப்பாளா் தனபால் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில், இமோஸ்டாசிஸ், ரத்தப்போக்கு நோய்களுக்கு மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறைகள், ஆய்வக அணுகுமுறைகள், ரத்தப்போக்கு நோய்களில் ரத்த பரிமாற்றத்தின் பங்குகள் குறித்து மருத்துவா்கள் எடுத்துரைத்தனா். தொடா்ந்து, மாணவா்களுக்கு வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரியின் துணை முதல்வா் செந்தில்குமாரி, ஆா்எம்ஓ லதா, மருத்துவ கல்வி ஒருங்கிணைப்பாளா் கலை அன்பு சுடா் உள்பட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.