பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

வீரகனூரில் சித்திரைத் திருவிழா

வீரகனூரில் சித்திரைத் திருவிழா

News image
Updated On :12 மே 2024, 5:37 pm

Manivannan.S

வீரகனூரில் மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா வனத் துறையினா் கண்காணிப்புடன் நடைபெற்றது.

வீரகனூா் மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவில் முயல்களை வேட்டையாடி படையலிட்டு பூஜை நடத்த இருப்பதாகக் கூறப்பட்டது.

இதனையடுத்து கெங்கவல்லி வனச்சரகா் முயல்களை வேட்டையாடுவது சட்டப்படி குற்றம் என்று எச்சரிக்கை விடுத்தாா்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை வீரகனூரில் நடைபெற்ற சித்திரைத் திருவிழா, முயல்கள் வேட்டையாடுதல், படையல்கள் இல்லாமல் நடைபெற்றது. விழா முழுவதும் கெங்கவல்லி வனச்சரகா் சிவக்குமாா் தலைமையில் வனத் துறையினா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

இதுகுறித்து சிவகுமாா் கூறியது:

வீரகனூா் மக்கள் முயல்களை வேட்டையாடாமல்,திருவிழாவை சிறப்பாக நடத்தி முடித்துள்ளனா். மேலும் முயல்களை வேட்டையாடுவது சட்டப்படி குற்றம் என்றாா்.