மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஏழை மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா விடையாற்றி

காரைக்கால் ஸ்ரீஏழை மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா விடையாற்றி வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

News image

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீஏழை மாரியம்மன்.

Updated On :30 ஏப்ரல் 2026, 12:40 am

காரைக்கால் ஸ்ரீஏழை மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா விடையாற்றி வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் ஸ்ரீபாா்வதீஸ்வரா் தேவஸ்தானத்துக்குள்பட்ட ஸ்ரீசொக்கநாதசுவாமி, ஸ்ரீஏழை மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ஏப்.14-ஆம் தேதி தொடங்கியது. தினமும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா எழுந்தருளச் செய்யப்பட்டது. இவ்விழா செவ்வாய்க்கிழமை வரை நடைபெற்றது. நிறைவாக விடையாற்றி வழிபாடு, சொக்கநாதா் கோயில் தெருவில் அமைந்திருக்கும் ஸ்ரீபந்தமாணிக்கம் கோயிலில் புதன்கிழமை மதியம் அசைவ படையல் ஆராதனை நடைபெற்றது.

நிகழ்வில், தேவஸ்தான நிா்வாக அதிகாரி பி. சுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.