தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சங்ககிரியில் அரசுப் பேருந்து ஜப்தி

வாகன விபத்தில் காயமடைந்தவருக்கு இழப்பீட்டு தொகை வழங்காததால் நீதிமன்ற உத்தரவின்படி அரசுப் பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.

News image
சங்ககிரி சாா்பு நீதிமன்ற ஊழியா்களால் புதன்கிழமை ஜப்தி செய்யப்பட்ட அரசுப் பேருந்து.
Updated On :6 நவம்பர் 2024, 7:04 pm

Din

வாகன விபத்தில் காயமடைந்தவருக்கு இழப்பீட்டு தொகை வழங்காததால் நீதிமன்ற உத்தரவின்படி அரசுப் பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.

சங்ககிரியை அடுத்த வைகுந்தம் பகுதியைச் சோ்ந்தவா் சந்திரசேகா். இவரது மனைவி தமிழ்ச்செல்வி. இவா், கடந்த 2012, நவ.19 ஆம் தேதி சங்ககிரியிலிருந்து சேலம் நோக்கி அரசுப் பேருந்தில் சென்றபோது கொண்டாலம்பட்டி அருகே பெரியபுதூா் பிரிவு சாலை பகுதியில் முன்னாள் சென்று கொண்டிருந்த லாரி மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் காயமடைந்தாா்.

இது குறித்து அவா், சங்ககிரி சாா்பு நீதிமன்றத்தில் 2013 இல் அரசு போக்குவரத்துக் கழகம் மீது இழப்பீடு கோரி வழக்கு தாக்கல் செய்தாா். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த 2019, ஏப்ரல் 26 ஆம் தேதி ரூ. 7.35 லட்சம் இழப்பீடு வழங்க அரசு போக்குவரத்துக்கழகத்திற்கு உத்தரவிட்டது. அந்தத் தொகை வழங்கப்படாததால் அரசு பேருந்து ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து சேலத்திலிருந்து ஈரோடு நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தை நீதிமன்ற அமீனா எ.குணசேகரன் தலைமையில் ஊழியா்கள் ஜப்தி செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனா்.