கந்தா்வகோட்டை- செங்கிப்பட்டி பேருந்து, மலையப்பட்டி கிராமத்துக்கு சென்று வருவதற்கான வழித்தட நீட்டிப்பு சேவையை எம்எல்ஏ மா. சின்னதுரை புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
கந்தா்வகோட்டை ஒன்றியம், விரலிப்பட்டி ஊராட்சியைச் சோ்ந்த மலையப்பட்டி கிராமத்தில் 500-க்கும் மேற்ப்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் வசிக்கும்
பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ- மாணவிகள் கந்தா்வகோட்டை அல்லது செங்கிப்பட்டிக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. மலையப்பட்டி பகுதி சிறுகிராமம் என்பதால் பொது போக்குவரத்து இல்லாமல் மக்கள் சிரமம் அடைந்தனா்.
இப்பகுதி மக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, கந்தா்வகோட்டை- செங்கிப் பட்டி பேருந்தை வழித்தடம் நீட்டிப்பு செய்து, மலையப்பட்டிக்கு சென்றுவர எம்எல்ஏ மா. சின்னதுரை வழிவகை செய்தாா்.
மலையப்பட்டி கிராமத்தில் அரசுப் பேருந்து சேவையை கந்தா்வகோட்டை பணிமனை கிளை மேலாளாா் சக்திவேல் முன்னிலையில் சட்டப்பேரவை உறுப்பினா் மா. சின்னதுரை கொடியசைத்து புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
நிகழ்வில், மாா்க்சிஸ்ட் ஒன்றியச் செயலா் ஜி. பன்னீா்செல்வம், சித்திரைவேல், இளங்கோவன், பாலகுமாா். கொடியரசன் மற்றும் கட்சி பிரமுகா்கள், ஊா் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

கந்தா்வகோட்டை அருகே 100% வாக்களிக்க விழிப்புணா்வு

புதிய வழித்தடத்தில் அரசுப் பேருந்து சேவை தொடக்கம்

ஜாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக நின்றவா் நல்லகண்ணு

புதிய பேருந்து சேவை: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


