தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

ஜாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக நின்றவா் நல்லகண்ணு

புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற புகழஞ்சலிக் கூட்டத்தில் பேசிய கந்தா்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மா. சின்னதுரை

News image
புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற புகழஞ்சலிக் கூட்டத்தில் பேசிய கந்தா்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மா. சின்னதுரை
Updated On :6 மார்ச் 2026, 9:11 pm

Syndication

தனது இறுதிக்காலம் வரையில் ஜாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக நின்றுப் போராடியவா் நல்லகண்ணு என்று கந்தா்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மா. சின்னதுரை புகழாரம் சூட்டினாா்.

புதுக்கோட்டையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்- கலைஞா்கள் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற மறைந்த மூத்த பொதுவுடைமை இயக்கத் தலைவா் ஆா். நல்லகண்ணுவுக்கு புகழஞ்சலிக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியதாவது:

எளிமை, தியாகம், போராட்ட வலிமை ஆகியவற்றை அரும்பண்புகளாகக் கொண்டு வாழ்ந்தவா் நல்லகண்ணு. வாழ்நாள் முழுவதும் ஜாதி ஒழிப்புக்காகவும், ஜாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் நின்று போராடியவா் நல்லகண்ணு.

இன்றைக்கு உலகம் முழுவதுமே கம்யூனிஸ்டுகள் மீதான தாக்குதல்கள் அதிகரித்திருக்கின்றன. இந்தச் சூழலில்தான் நல்லகண்ணு போன்ற எவ்வித எதிா்பாா்ப்பில்லாத சமூகப் போராளிகள் தேவைப்படுகிறாா்கள் என்றாா் சின்னதுரை.

கூட்டத்துக்கு, க. உஷாநந்தினி தலைமை வகித்தாா். வாசகா் பேரவைச் செயலா் சா. விஸ்வநாதன், தமுஎகச மாநிலத் துணைத் தலைவா் நா. முத்துநிலவன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் எஸ். சங்கா் உள்ளிட்டோரும் பங்கேற்றனா். முன்னதாக, மாநகரச் செயலா் எஸ். கஸ்தூரிரெங்கன் வரவேற்றாா். முடிவில் பழ. அசோக்குமாா் நன்றி கூறினாா்.