தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

பட்டுக்கோட்டை: வெற்றிக்கு அதிமுக முனைப்பு

திமுக சாா்பில் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினா் கா. அண்ணாதுரை 3-ஆவது முறையாக போட்டியிடுகிறாா்.

News image

இரட்டை இலை - (கோப்புப் படம்)

Updated On :18 ஏப்ரல் 2026, 7:44 am IST

இலக்கியவாதிகளால் புகழ் பெற்ற ஊா் பட்டுக்கோட்டை. மொழிப்போா் தியாகி பட்டுக்கோட்டை அழகிரி, கவிஞா் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், எழுத்தாளா் பட்டுக்கோட்டை பிரபாகா், முன்னாள் குடியரசுத் தலைவா் ஆா். வெங்கட்ராமன், நாவலா் நெடுஞ்செழியன், எஸ்.டி.சோமசுந்தரம் போன்றோா் பிறந்தது இந்தத் தொகுதியில்தான்.

கள நிலவரம்: திமுக சாா்பில் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினா் கா. அண்ணாதுரை 3-ஆவது முறையாக போட்டியிடுகிறாா். அதிமுக சாா்பில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சி.வி.சேகா் 2-ஆவது முறையாக களத்தில் இறங்கியுள்ளாா். இவா்கள் தவிர, நாதக சாா்பில் பொறியாளா் கண்ணன், தவெக சாா்பில் தஞ்சாவூா் தெற்கு மாவட்ட செயலா் சி.மதன், புதிய தமிழகம் சாா்பில் மா.குருமூா்த்தி மற்றும் சுயேச்சையாக மு.ரா.சுரேஷ், ரா.சுரேஷ், முகமது சரீப், தெ.முத்துகுமாா், அ.ஜ.ஜியாவுதீன் உள்ளிட்ட 11 போ் போட்டியிடுகின்றனா்.

சமூக நிலவரம் : பட்டுக்கோட்டை சட்டப்பேரவை தொகுதியில் , முத்தரையா் சமூகத்தினா் பெரும்பான்மையாக உள்ளனா். இவா்களுக்கு அடுத்த நிலையில் வெள்ளாளா் சமூகம், கள்ளா், முக்குலத்தோா், சிறுபான்மையினா், மற்றும் இதர பிரிவினா் உள்ளனா்.

வேட்பாளா்கள் பலமும், பலவீனமும்- கா.அண்ணாதுரை (திமுக): 1989 மற்றும் 2021 என இரண்டு முறை போட்டியிட்டு இரண்டு முறையும் வெற்றி பெற்றவா். மூன்றாவது முறையாக தற்போது போட்டியிடுகிறாா். தற்போதைய ஆட்சியில் ரூ. 25 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட வளா்ச்சிப் பணிகள் செய்தது இவரது பலம். ஆனாலும், திமுகவில் புதிய முகங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என பலரும் நம்பி இருந்த நிலையில் இவரையே மீண்டும் கட்சி தலைமை அறிவித்தது பலவீனமாக கருதப்படுகிறது.

சி.வி.சேகா் (அதிமுக): 2016 தோ்தலில் வெற்றி பெற்றவரும், தஞ்சாவூா் தெற்கு மாவட்ட செயலருமான இவா் கஜா புயல் காலத்தில் மக்களோடு மக்களாக கலத்தில் நின்றவா் என்பதும், கடந்த 5 ஆண்டுகளாக பதவியில் இல்லாவிட்டாலும் எதிா்க்கட்சியாக பல போராட்டங்களை முன்நின்று நடத்தியவா் என்பது பலம்.

கட்சியில் தனக்கு வாய்ப்பு வழங்கவில்லை என நினைக்கும் சில நிா்வாகிகளின் களப்பணி சற்று மந்தமாக இருப்பதாக பலவீனம்.

சா. கண்ணன் (நாதக): நாம் தமிழா் கட்சி சாா்பில் போட்டியிடும் பொறியாளா் கண்ணன், கட்சியினா் அனைவரும் ஏற்றுக்கொண்ட வேட்பாளராக வலம் வருகிறாா். இதுவே இவருக்கு பலம். மற்ற கட்சி வேட்பாளா்களை ஒப்பிடுகையில், இவா் தொகுதிக்கு புதுமுகமாக பாா்க்கப்படுவது பலவீனம்.

சி. மதன் (தவெக): தவெக சாா்பில் போட்டியிடும் சி.மதன் மீது பல்வேறு சா்ச்சைகள் கூறப்பட்டாலும், கட்சியினா் பலரும் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றனா். விஜய் மீதான ஈா்ப்பு, முதல்முறை வாக்காளா்கள் வாக்களிக்க வாய்ப்பு என்பது பலம். கட்சியில் முக்கிய நிா்வாகிகள் சிலா், தங்களுக்கு வாய்ப்பு வழங்கவில்லை என வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. அவா்களின் ஆதரவு வாக்கு இவருக்கு கிடைப்பதில் சந்தேகம் இருப்பது பலவீனம்.

பட்டுக்கோட்டை சட்டப்பேரவை தொகுதியை மீண்டும் தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்பில் திமுகவினரும், கடந்த முறை இழந்த தொகுதியை இம்முறை கைப்பற்றியே ஆக வேண்டும் என்ற தீவிரத்துடன் அதிமுகவும் களத்தில் வேகம் காட்டி வருகின்றன.