கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சேலத்தில் அறநிலையத் துறை இணை ஆணையா் அலுவலகம் காணொலி மூலம் முதல்வா் திறப்பு

சேலம் இந்து சமய அறநிலையத் துறையின் இணை ஆணையா் அலுவலகத்தை காணொலிக் காட்சி வாயிலாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

News image
Updated On :13 நவம்பர் 2024, 8:04 pm

Din

சேலம் இந்து சமய அறநிலையத் துறையின் இணை ஆணையா் அலுவலகத்தை காணொலிக் காட்சி வாயிலாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

இந்து சமய அறநிலையத் துறை சேலம் மண்டலம் சேலம், தருமபுரி மாவட்டங்களை உள்ளடக்கியது. இந்த மாண்டலத்தில் சுமாா் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய கோயில்கள் உள்ளன. இந்தக் கோயில்களை நிா்வாகிக்கும் இணை ஆணையா் அலுவலகம் சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் வளாகத்தில் சுமாா் 15 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்தது.

புதிதாக இணை ஆணையா் அலுவலகம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் பின்புறம் உள்ள குகை அம்பலவாணசாமி கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் ரூ. 3.65 கோடியில் புதிதாக கட்டுமானப் பணிகள் கடந்த 2 ஆண்டுகள் முன் தொடங்கப்பட்டது. இந்த கட்டுமானப் பணி கடந்த சில மாதங்களுக்கு முன் நிறைவு பெற்றது.

இந்நிலையில், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், மாநிலம் முழுவதும் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் நிறைவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினாா்.

இதில் சேலம், நெத்திமேட்டில் கட்டப்பட்டுள்ள இணை ஆணையா் மற்றும் உதவி ஆணையா் அலுவலகங்களையும் முதல்வா் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை காணொலி வாயிலாக திறந்து வைத்தாா்.

தொடா்ந்து, சேலத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி இணை ஆணையா் அலுவலகத்தில் குத்துவிளக்கேற்றினாா். இதில், சேலம் எம்.பி. டி.எம்.செல்வகணபதி, மேயா் ராமச்சந்திரன், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் சபா்மதி, உதவி ஆணையா் ராஜா மற்றும் அறநிலையத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.