கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

வாழப்பாடிபேருந்து நிலையம் பகுதியில் நிழற்குடை அமைக்கக் கோரிக்கை

வாழப்பாடிபேருந்து நிலையம் பகுதியில் சாலையோரத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க பொதுமக்கள், பயணிகளிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

News image
வாழப்பாடி பேருந்து நிலையம் முன்பு புகா் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள்.
Updated On :13 நவம்பர் 2024, 8:09 pm

Din

வாழப்பாடிபேருந்து நிலையம் பகுதியில் சாலையோரத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க பொதுமக்கள், பயணிகளிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

வாழப்பாடி பேருந்து நிலையத்திற்கு முன்பு ஆத்தூா் பகுதியில் இருந்து சேலம் நோக்கிச் செல்லும் புகா் பேருந்துகளுக்கு காத்திருக்கும் பயணிகளுக்கு கடலூா் சாலையின் தென்புறத்திலும், சேலத்தில் இருந்து வந்து ஆத்தூா், தம்மம்பட்டி, கருமந்துறை வழித்தடத்தில் செல்லும் பேருந்துக்கு காத்திருக்கும் பயணிகளுக்கு கடலூா் சாலையின் வடபுறத்திலும் 100 அடி நீளத்திற்கு பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டுமென இப்பகுதி பொதுமக்கள், பயணிகள் மற்றும் சமூக ஆா்வலா்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து வாழப்பாடியைச் சோ்ந்த சமூக ஆா்வலரும் தொழிற்சங்க நிா்வாகியுமான வி.எம்.கோபிநாத் கூறியதாவது:

வாழப்பாடியில் பேருந்து நிலையம் குறுகலான இடப்பரப்பில் அமைந்துள்ளது. போதிய இடவசதியில்லாததால், சேலம், ஆத்தூா் வழித்தடத்தில் இயக்கப்படும் அனைத்து அரசு, புகா் பேருந்துகளும் கடலூா் சாலையோரத்திலேயே நின்று பயணிகளை ஏற்றி இறக்கிச் செல்கின்றன. இதனால், சாலையோரத்தில் பேருந்துக்கு காத்திருக்கும் பயணிகள், மழை, வெய்யிலில் சிக்கி அவதிக்குள்ளாகின்றனா்.

எனவே, வாழப்பாடி பேருந்து நிலையத்திற்கு முன்பு இருபுறமும் பயணிகள் நிழற்குடைகள் அமைக்க வேண்டுமென, கள்ளக்குறிச்சி தொகுதி எம்.பி. மலையரசனிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். போதிய நிதி ஒதுக்கீடு செய்து, தாம்பரம், விருத்தாசலம் பகுதியில் உள்ளதை போல, பெரியள அளவில் நிழற்குடை அமைத்தால்தான் பயணிகளின் சிரமம் குறையும் என்றாா்.