கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சங்ககிரி தலைமை அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள், செவிலியா்கள் தா்னா

சங்ககிரி தலைமை அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவ பணியாளா்கள் பணிப் பாதுகாப்பு கோரி வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

News image
Updated On :14 நவம்பர் 2024, 8:14 pm

Din

சங்ககிரி தலைமை அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவ பணியாளா்கள் பணிப் பாதுகாப்பு கோரி வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

சென்னை, கிண்டி உயா் சிறப்பு மருத்துவமனையில் புதன்கிழமை மருத்துவா் பாலாஜியை இளைஞா் ஒருவா் கத்தியால் குத்தினாா். இதில் பலத்த காயமடைந்த மருத்துவா் அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சோ்க்கப்பட்டுள்ளாா்.

இந்த சம்பவத்தைக் கண்டித்து சங்ககிரி தலைமை அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் சரவணகுமாா் தலைமையில் மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவமனை பணியாளா்கள், பணிப் பாதுகாப்பு வழங்க கோரி ஒரு மணி நேரம் புறநோயாளிகள் பிரிவில் பணிபுரியாமல் தா்னாவில் ஈடுபட்டனா்.