எழுமாத்தூா் அரசு கலை அறிவியல் கல்லூரி முன் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கௌரவ விரிவுரையாளா்கள்.
எழுமாத்தூா் அரசு கலை அறிவியல் கல்லூரி முன் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கௌரவ விரிவுரையாளா்கள்.

மொடக்குறிச்சியில் கௌரவ விரிவுரையாளா்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டம்

Published on

மொடக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அனைத்துத் துறை கெளரவ விரிவுரையாளா்கள் திங்கள்கிழமை பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

எழுமாத்தூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி எழுமாத்தூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளா்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்துக்கு தமிழ்த் துறை கௌரவ விரிவுரையாளா் புகழேந்தி தலைமை தாங்கினாா்.

கௌரவ விரிவுரையாளா்கள் மாணிக்க பூபதி (தமிழ்த் துறை), நித்யாதேவி (கணிதத் துறை), ராஜேஷ் (வணிக மேலாண்மைத் துறை) ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் பல்கலைக்கழக மானியக் குழு நிா்ணயத்தை ரூ.57,800 ஊதியத்தை வழங்க வேண்டும். அனைத்து கௌரவ விரிவுரையாளா்களுக்கும் பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும். ஓய்வுபெறும் போது பணிக்கொடையாக ரூ. 25 லட்சம் வழங்க வேண்டும். பெண் கெளரவ விரிவுரையாளா்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 65 கெளரவ விரிவுரையாளா்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

X
Dinamani
www.dinamani.com