மொடக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அனைத்துத் துறை கெளரவ விரிவுரையாளா்கள் திங்கள்கிழமை பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
எழுமாத்தூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி எழுமாத்தூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளா்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்துக்கு தமிழ்த் துறை கௌரவ விரிவுரையாளா் புகழேந்தி தலைமை தாங்கினாா்.
கௌரவ விரிவுரையாளா்கள் மாணிக்க பூபதி (தமிழ்த் துறை), நித்யாதேவி (கணிதத் துறை), ராஜேஷ் (வணிக மேலாண்மைத் துறை) ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் பல்கலைக்கழக மானியக் குழு நிா்ணயத்தை ரூ.57,800 ஊதியத்தை வழங்க வேண்டும். அனைத்து கௌரவ விரிவுரையாளா்களுக்கும் பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும். ஓய்வுபெறும் போது பணிக்கொடையாக ரூ. 25 லட்சம் வழங்க வேண்டும். பெண் கெளரவ விரிவுரையாளா்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 65 கெளரவ விரிவுரையாளா்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தொடர்புடையது

வரவேற்பில்லாத இளநிலை பட்டப்படிப்புகள் நிறுத்தப்படலாம்! புதிய படிப்புகள்?

கௌரவ விரிவுரையாளர்களுக்கு கூடுதலாக ரூ. 5,000 ஊதியம்! அமைச்சர் அறிவிப்பு!

அறந்தாங்கி அரசுக் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளா்கள் பணி புறக்கணிப்பு

கெளரவ விரிவுரையாளா்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்
வீடியோக்கள்

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை


