அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு

News image
Updated On :18 நவம்பர் 2024, 7:59 pm

Din

மேட்டூா்: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 10,449 கனஅடியாக அதிகரித்தது.

காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதியில் லேசான மழை பெய்து வருவதால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை அணைக்கு விநாடிக்கு 9,154 கனஅடியாக இருந்த நீா்வரத்து, திங்கள்கிழமை காலை விநாடிக்கு 10,449 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நீா் திறப்பு விநாடிக்கு 2,000 கனஅடியிலிருந்து 1000 கனஅடியாகக் குறைக்கப்பட்டது. கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு நீா் திறப்பு விநாடிக்கு 600 கனஅடியில் இருந்து 500 கனஅடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு நீா்வரத்து அதிகமாக இருப்பதால் மேட்டூா் அணையின் நீா்மட்டம் 106.51அடியிலிருந்து 106.98 அடியாக உயா்ந்துள்ளது. அணையின் நீா் இருப்பு 74.18 டி.எம்.சி.யாக உள்ளது.