கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஆண்களுக்கு நவீன கருத்தடை சிகிச்சை முகாம் தொடக்கம்

சேலம், நாமக்கல் மாவட்ட குடும்ப நலத்துறை சாா்பில் ஆண்களுக்கான நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சை முகாம் வியாழக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :21 நவம்பர் 2024, 8:17 pm

Din

சேலம், நாமக்கல் மாவட்ட குடும்ப நலத்துறை சாா்பில் ஆண்களுக்கான நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சை முகாம் வியாழக்கிழமை தொடங்கியது.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பயிற்சி பெற்ற மருத்துவா்களால் கருத்தடை சிகிச்சை முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து குடும்பநலத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘ஆண்களுக்கான குடும்பநல கருத்தடை சிகிச்சை என்பது 5 நிமிடங்களில் செய்யப்படும். எளிமையாகவும், பாதுகாப்பான முறையிலும் சிகிச்சை வழங்கப்படும். இதன் மூலம் எந்த விதமான பக்கவிளைவுகளும் ஏற்படாது.

கருத்தடை செய்யும் ஆண்களுக்கு தமிழக அரசு ஊக்கத்தொகையாக ரூ.1,100, ஊக்க அன்பளிப்புத்தொகையாக ரூ. 2,000 என மொத்தம் ரூ. 3,100 வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு சேலம் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் 86100- 86630 என்ற எண்ணிலும், நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் 94872-19896 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் என்றனா்.