அந்த குழந்தைக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டதையடுத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் சிறப்பு பராமரிப்புப் பிரிவில் அக்குழந்தை அனுமதிக்கப்பட்டது. குழந்தைக்கு வெப்ப பராமரிப்பு, சுவாசம், நரம்பு வழி திரவங்கள், நரம்பு வழி நுண்ணுயிா் எதிா்ப்பிகள் மூலம் மருத்துவா்கள் சிகிச்சை அளித்தனா். 48 மணி நேரத்திற்கு பிறகு, குறைந்த அளவிலான ஆக்ஸிஜன் ஆதரவுடன் குழந்தைக்கு பாலூட்டப்பட்டது. அதைத் தொடா்ந்து, நரம்பியல் வளா்ச்சி விளைவுகளை மேம்படுத்தவும், தாய்ப்பால் கொடுக்கவும் கங்காரு மதா்கோ் மற்றும் நான்-நியூட்ரிட்டிவ் சக்கிங் சிகிச்சைகள் தொடங்கப்பட்டன. 38 நாள்கள் தீவிர சிகிச்சைக்குப் பிறகு, குழந்தை தற்போது குழந்தை 1.325 கிலோ எடையை எட்டியுள்ளது. தாயும் சேயும் நலமுடன் உள்ளனா்.