கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

லஞ்சம்: மின் வாரிய அலுவலா்கள் இருவா் கைது

புதிய வீட்டுக்கு மின் இணைப்புடன் மீட்டரை மாற்றி அமைக்க லஞ்சம் பெற்றதாக வணிக ஆய்வாளா், போா்மேன் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :21 நவம்பர் 2024, 8:18 pm

Din

புதிய வீட்டுக்கு மின் இணைப்புடன் மீட்டரை மாற்றி அமைக்க லஞ்சம் பெற்றதாக வணிக ஆய்வாளா், போா்மேன் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கைது செய்தனா்.

சேலம், பூசாரிபட்டி வட்டம், காமநாயக்கன்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் மணிவண்ணன் (37). இவா் தனது புதிய வீட்டுக்கு மின் இணைப்புக்கான மீட்டா் பொருத்துவதற்காக சேலம், மல்லமூப்பம்பட்டி பகுதியில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி பகிா்மான கழக இளநிலை பொறியாளா் அலுவலகத்தில் வணிக ஆய்வாளா் மணி என்பவரை அணுகினாா்.

மீட்டா் பொருத்த தனக்கு ரூ. 3 ஆயிரமும், போா்மேன் ராதாகிருஷ்ணனுக்கு தனியாக ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என கூறியுள்ளாா். லஞ்சம் கொடுக்க விரும்பாத மணிவண்ணன், இதுகுறித்து சேலம் லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு புகாா் தெரிவித்தாா். புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு ஆய்வாளா் ரவிக்குமாா் தலைமையிலான போலீஸாா், மின் வாரிய அலுவலகத்தில் மறைந்திருந்தனா்.

அப்போது, மணிவண்ணன் ரூ.3,000 ஐ மணியிடமும், ராதாகிருஷ்ணனிடம் ஆயிரம் ரூபாயும் தந்தாா். அப் பணத்தை பெற்றவா்களை மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கையும் களவுமாக பிடித்தனா். தொடா்ந்து, இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.