ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

நெல் பயிருக்கு காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

பாரத பிரதமா் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நெல் பயிருக்கு காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :21 நவம்பர் 2024, 9:28 pm

Din

பாரத பிரதமா் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நெல் பயிருக்கு காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெத்தநாயக்கன்பாளையம் வட்டார வேளாண்மைத் துறை உதவி இயக்குநா் வேல்முருகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பாரத பிரதமரின் பயிா்க் காப்பீடு திட்டத்தின் கீழ் பெத்தநாயக்கன்பாளையம் வட்டார விவசாயிகள் ஏராளமானோா் இழப்பீடு பெற்றுள்ளனா். நடப்பு பட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் பயிருக்கு, பாரத பிரதமா் நெல் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய வரும் நவ. 30 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, நெல் பயிரிட்டுள்ள விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்து பயன் பெறலாம்.

நில கணினி சிட்டா, அடங்கல், ஆதாா் காா்டு, வங்கி சேமிப்பு கணக்கு புத்தக நகல், கடவுச்சீட்டு அளவு புகைப்படத்துடன் அருகே உள்ள இ சேவை மையங்களுக்கு சென்று ஏக்கருக்கு ரூ. 550 மட்டும் காப்பீட்டு தொகை செலுத்தி காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.