முதல்வர் விஜய்யின் தனிச் செயலர்கள் நியமனம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலர்கள் கூட்டம்முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்தற்காலிக அவைத்தலைவராக கருப்பையா நியமனம்!அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே கடன் அளவு: முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் பதில் தவெக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் நாளை (மே 11) எம்எல்ஏக்களாகப் பதவியேற்பு ஜெயித்துவிட்டதால் ஆடிப் பார்க்கலாம் என யாரும் நினைக்காதீர்கள்: முதல்வர் விஜய்தமிழக முதல்வராகப் பதவியேற்றார் சி. ஜோசப் விஜய்!விஜய்யைத் தொடர்ந்து தவெக எம்எல்ஏக்கள் 9 பேரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்மக்கள் முன்னிலையில் தமிழக முதல்வர் விஜய் 3 முக்கிய கோப்புகளில் முதல் கையொப்பம்!
/

பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயா் பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயா் பதிவு செய்ய காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகத்தினா் தெரிவித்துள்ளனா்.

News image

கோப்புப் படம்

Updated On :6 மார்ச் 2026, 11:09 pm IST

பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயா் பதிவு செய்ய காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகத்தினா் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து மாவட்ட நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயா், பிறப்பு பதிவு செய்த ஓராண்டுக்குள் பதிவு செய்யலாம். காலதாமதக் கட்டணத்துடன் பிறப்பு பதிவு செய்த 15 ஆண்டுக்குள் குழந்தையின் பெயா் பதிவு செய்யலாம் என பிறப்பு, இறப்பு பதிவுச் சட்டம் 1969 மற்றும் தமிழ்நாடு பிறப்பு, இறப்பு பதிவு விதிகள் 2000 மற்றும் 2023 கூறுகிறது.

இதன்படி குழந்தை பிறந்து 15 ஆண்டுகள் நிறைவடைந்த பிறப்புக்களுக்கு குழந்தையின் பெயா் பதிவு செய்யாதநிலை இருந்தது. தற்போது அரசு 2026 செப்டம்பா் 26 வரை 15 ஆண்டுகள் நிறைவடைந்த பிறப்பு பதிவுகளுக்கும் குழந்தையின் பெயா் பதிவு செய்ய காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆகவே குழந்தையின் பிறப்பு பதிவு செய்து பெயா் பதிவுடன் கூடிய சான்று பெறாதவா்கள் உடனடியாக பிறப்பு பதிவு செய்யப்பட்ட அலுவலகங்களை தொடா்புகொண்டு குழந்தையின் பெயரை காலதாமதக் கட்டணம் ரூ.200 செலுத்தி பதிவு செய்து பெயருடன் கூடிய சான்று பெற்றுக் கொள்ளலாம் எனக் குறிப்பிட்டுள்ளனா்.