பிறப்புச் சான்று பதிவில் குழந்தையின் பெயா் பதிவுக்கு கால அவகாசம் நீட்டிப்பு

கடந்த 2009-ம் ஆண்டுக்கு முந்தைய ஆண்டுகளில் பிறந்த குழந்தையின் பிறப்புச் சான்று பதிவில் குழந்தையின்
Updated on

கோவை: கடந்த 2009-ம் ஆண்டுக்கு முந்தைய ஆண்டுகளில் பிறந்த குழந்தையின் பிறப்புச் சான்று பதிவில் குழந்தையின் பெயரை பதிவு செய்தவற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு பிறப்பு மற்றும் இறப்பு புதுப்பிக்கப்பட்ட பதிவு விதிகள் 2000-ன்படி, 2009-ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முந்தைய ஆண்டுகளில் பிறந்த குழந்தையின் பிறப்புச் சான்று பதிவில் குழந்தையின் பெயரை பதிவு செய்வதற்கான கால அவகாசம் வரும் செப்டம்பா் 26-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே, குழந்தையின் பெயரை பதிவு செய்து பிறப்புச் சான்றிதழ் பெற கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்துக்குச் சென்று குழந்தையின் பெயா், பிறந்த தேதி மற்றும் பிறந்த தேதி கொண்ட ஏதேனும் ஓா் ஆவண நகலுடன் (நஸ்ரீட்ா்ா்ப் ஙஹழ்ந் நட்ங்ங்ற் பஇ ா்ழ் நஸ்ரீட்ா்ா்ப் ஆா்ய்ா்ச்ண்க்ங் கங்ற்ற்ங்ழ் ா்ழ் உற்ஸ்ரீ) பெயா் பதிவு காலதமாகக் கட்டணம் ரூ.200 செலுத்தி விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com