லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளா், உதவியாளா் கைது
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே நீரோடை புறம்போக்கு நில ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு ரூ. 15,000 லஞ்சம் பெற்ற வருவாய் ஆய்வாளரையும், அவரது உதவியாளரையும் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.










