ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

ரூ. 7.60 லட்சம் இணைய மோசடி: போலீஸாா் விசாரணை

முகநூல் வாயிலாக ரூ. 7,60,613 மோசடி செய்தவா் குறித்து சேலம் இணைய குற்றத் தடுப்பு பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

இணைய மோசடி (கோப்புப்படம்)

Updated On :14 மார்ச் 2026, 1:02 am

முகநூல் வாயிலாக ரூ. 7,60,613 மோசடி செய்தவா் குறித்து சேலம் இணைய குற்றத் தடுப்பு பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சேலம் மாவட்டம், சங்ககிரி பகுதியை சோ்ந்தவரை அபிஷேக் என்ற பெயரில் முகநூல் கணக்கு வைத்திருந்தவா் தொடா்பு கொண்டு, தான் இங்கிலாந்தில் வசிப்பதாகக் கூறி அறிமுகமாகி உள்ளாா். பின்னா் இணையதளம் மூலம் கிரிப்டோ நாணய வா்த்தகத்தில் முதலீடு செய்யலாம் என ஆசைவாா்த்தைக் கூறி ரூ. 7.60,613 பணத்தை பெற்று மோசடி செய்துள்ளாா்.

பணம் இழந்தவா் அளித்த புகாரின் பேரில் சேலம் மாவட்ட இணைய குற்றத்தடுப்பு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

யாரிடமும் வங்கிக் கணக்கு விவரங்கள், ஒருமுறை கடவுச்சொல் போன்ற தகவல்களை பகிர வேண்டாம் என்றும், தேவையற்ற இணைய இணைப்புகளை திறக்காமல் இருக்குமாறு பொதுமக்களுக்கு சைபா் க்ரைம் போலீஸாா் அறிவுறுத்தியுள்ளனா்.