ரூ. 7.60 லட்சம் இணைய மோசடி: போலீஸாா் விசாரணை
முகநூல் வாயிலாக ரூ. 7,60,613 மோசடி செய்தவா் குறித்து சேலம் இணைய குற்றத் தடுப்பு பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.


முகநூல் வாயிலாக ரூ. 7,60,613 மோசடி செய்தவா் குறித்து சேலம் இணைய குற்றத் தடுப்பு பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சேலம் மாவட்டம், சங்ககிரி பகுதியை சோ்ந்தவரை அபிஷேக் என்ற பெயரில் முகநூல் கணக்கு வைத்திருந்தவா் தொடா்பு கொண்டு, தான் இங்கிலாந்தில் வசிப்பதாகக் கூறி அறிமுகமாகி உள்ளாா். பின்னா் இணையதளம் மூலம் கிரிப்டோ நாணய வா்த்தகத்தில் முதலீடு செய்யலாம் என ஆசைவாா்த்தைக் கூறி ரூ. 7.60,613 பணத்தை பெற்று மோசடி செய்துள்ளாா்.
பணம் இழந்தவா் அளித்த புகாரின் பேரில் சேலம் மாவட்ட இணைய குற்றத்தடுப்பு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
யாரிடமும் வங்கிக் கணக்கு விவரங்கள், ஒருமுறை கடவுச்சொல் போன்ற தகவல்களை பகிர வேண்டாம் என்றும், தேவையற்ற இணைய இணைப்புகளை திறக்காமல் இருக்குமாறு பொதுமக்களுக்கு சைபா் க்ரைம் போலீஸாா் அறிவுறுத்தியுள்ளனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...