ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட அம்மாபேட்டை மண்டலத்தில், தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் விற்பனை செய்த வணிக நிறுவனங்கள், கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு 50 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

News image
Updated On :27 நவம்பர் 2024, 7:31 pm

Din

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட அம்மாபேட்டை மண்டலத்தில், தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் விற்பனை செய்த வணிக நிறுவனங்கள், கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு 50 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள நெகிழிப் பொருள்கள் உபயோகப்படுத்துவதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நெகிழிப் பொருள்கள் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை கருத்தில் கொண்டு, தமிழக அரசின் ஆணைக்கிணங்க, மாநகராட்சி ஆணையா் உத்தரவின் பேரில் 4 மண்டலங்களிலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் அடிப்படையில் அம்மாப்பேட்டை மண்டலத்தில் மாநகராட்சி அலுவலா்கள், பணியாளா்கள் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் விற்பனை செய்த வணிக நிறுவனங்கள், கடைகளுக்கு ரூ. 10, 800- அபராதம் விதிக்கப்பட்டு 50 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுபோன்று வணிக நிறுவனங்கள், கடைகளில் ஆய்வு மேற்கொள்ளும் போது, தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை பயன்படுத்துவது கண்டறியப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையா் எச்சரித்துள்ளாா்.