ஜெயங்கொண்டத்தில் 1,300 கிலோ புகையிலைப் பொருள்கள் அழிப்பு


அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதிகளிலுள்ள கடைகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 1,300 கிலோ புகையிலைப் பொருள்கள் அழிக்கப்பட்டன.
ஜெயங்கொண்டம், கல்லாத்தூா், சின்னவளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினா் ஜெயங்கொண்டம் நகரத்துக்கு அருகிலுள்ள 10 கிராமங்களில் மளிகை மற்றும் பெட்டிக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டபோது புகையிலை, ஹான்ஸ் உள்ளிட்ட 1,300 கிலோ பொருள்களை பறிமுதல் செய்தனா்.
இவை சனிக்கிழமை இரவு புதுக்குடி கிராமத்தில் உள்ள குப்பைக்கிடங்கில் பொக்லைன் இயந்திரம் கொண்டு பள்ளம் தோண்டிப் புதைக்கப்பட்டன. இதில் ஜெயங்கொண்டம் காவல் ஆய்வாளா் பாலாஜி தலைமையில், காவலா்கள், நீதிமன்ற பணியாளா்கள் ஈடுபட்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...