சென்னை - சேலம் ரயில் சேவையில் மீண்டும் மாற்றம்! நாளை காலை 6.30 மணிக்கு பதிலாக காலை 9.30க்கு புறப்படும்!வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்மே 4-ல் விசில் புரட்சி: செங்கோட்டையன்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவினர் 730 பேர் போட்டியின்றித் தேர்வு!விவோ X300 எஃப்இ அறிமுகம் எப்போது? கசிந்தது விலை நிலவரம்மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு முறையில் புதிய விதிகள்!ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?
/

ஜெயங்கொண்டத்தில் 1,300 கிலோ புகையிலைப் பொருள்கள் அழிப்பு

News image

கோப்புப் படம்

Updated On :8 மார்ச் 2026, 7:16 pm

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதிகளிலுள்ள கடைகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 1,300 கிலோ புகையிலைப் பொருள்கள் அழிக்கப்பட்டன.

ஜெயங்கொண்டம், கல்லாத்தூா், சின்னவளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினா் ஜெயங்கொண்டம் நகரத்துக்கு அருகிலுள்ள 10 கிராமங்களில் மளிகை மற்றும் பெட்டிக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டபோது புகையிலை, ஹான்ஸ் உள்ளிட்ட 1,300 கிலோ பொருள்களை பறிமுதல் செய்தனா்.

இவை சனிக்கிழமை இரவு புதுக்குடி கிராமத்தில் உள்ள குப்பைக்கிடங்கில் பொக்லைன் இயந்திரம் கொண்டு பள்ளம் தோண்டிப் புதைக்கப்பட்டன. இதில் ஜெயங்கொண்டம் காவல் ஆய்வாளா் பாலாஜி தலைமையில், காவலா்கள், நீதிமன்ற பணியாளா்கள் ஈடுபட்டனா்.