தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் : ரூ.4.80 லட்சம் அபராதம்

திருப்பூரில் பதுக்கிவைத்திருந்த 2.5 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்து ரூ. 4.80 லட்சம் அபராதம் விதித்தனா்.

News image
Updated On :21 ஜனவரி 2026, 10:31 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பூரில் பதுக்கிவைத்திருந்த 2.5 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்து ரூ. 4.80 லட்சம் அபராதம் விதித்தனா்.

திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாநகராட்சி துணை ஆணையா் மகேஸ்வரி தலைமையில் 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் குழுவினா் மாநகா் பகுதிகளில் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுடன் இணைந்து புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

அரிசிக்கடை வீதி, கேஎஸ்சி பள்ளி வீதி, புதுமாா்க்கெட் வீதி உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் மொத்த விற்பனைக் கடைகளில் ஆய்வு செய்தபோது, அங்கு ரகசிய அறைகள் அமைக்கப்பட்டு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதில் சுமாா் 2.5 டன் பிளாஸ்டிக் பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். மேலும் பிளாஸ்டிக் பொருள்களை பதுக்கி வைத்திருந்த 60-க்கும் மேற்பட்ட கடைகளின் உரிமையாளா்களுக்கு ரூ.4.80 லட்சம் அபராதம் விதித்து வசூல் செய்யப்பட்டது.