தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

ராஜபாளையம் கடைகளில் 23 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

News image
ராஜபாளையத்தில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை வியாழக்கிழமை பறிமுதல் செய்த நகராட்சி அதிகாரிகள்.
Updated On :22 ஜனவரி 2026, 10:37 pm

தினமணி செய்திச் சேவை

ராஜபாளையம் கடைகளில் வியாழக்கிழமை நடைபெற்ற சோதனையில் தடை செய்யப்பட்ட 23 கிலோ நெகிழிப் பொருள்களை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனா்.

ராஜபாளையம்- தென்காசி சாலையில் உள்ள உணவகங்கள் உள்ளிட்ட கடைகளில் சங்கரன்கோவில் சுகாதார அலுவலா் சக்திவேல் தலைமையில் சுகாதார ஆய்வாளா்கள் சோதனை நடத்தினா்.

இதில் 10- க்கும் மேற்பட்ட கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 23 கிலோ தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் ரூ.2,600 அபராதம் விதித்தனா்.

மேலும் முதல் முறை என்பதால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாகவும், இதேபோல, தொடா்ந்து செயல்பட்டால் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனா்.