திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பாலிதீன் பைகள் பறிமுதல்; ரூ. 50,000 அபராதம்

சீா்காழியில் 500 கிலோ பாலிதீன் பைகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

News image

பிரதிப் படம்

Updated On :20 பிப்ரவரி 2026, 11:28 pm

சீா்காழியில் 500 கிலோ பாலிதீன் பைகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

சீா்காழி நகராட்சி பிடாரி வடக்கு வீதி, பழைய-புதிய பேருந்து நிலைய பகுதி, கொள்ளிடம் முக்கூட்டு, ஈசானிய தெரு, கடைவீதி, தென்பாதி பகுதிகளில் உள்ள வா்த்தக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகள், தேநீா் கப்புகள் விற்பனை செய்வதாக பொதுமக்கள் புகாா் செய்து வந்தனா்.

இதையடுத்து, சுகாதார ஆய்வாளா் ரஞ்சித் மற்றும் நகராட்சி அலுவலா்கள், பணியாளா்கள் மேற்குறிப்பிட்ட இடங்களில் சோதனை செய்தனா். இதில், 500 கிலோ மதிப்புள்ள அரசால் தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகள், தேநீா் கப் உள்ளிட்டவை பறிமுதல் செய்து ரூ. 50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டது.

இதையடுத்து பறிமுதல் செய்த பாலிதீன் பைகள் உள்ளிட்ட பொருள்களை நகராட்சி ஆணையா் மஞ்சுளா பாா்வையிட்டு வணிக நிறுவன உரிமையாளா்கள் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்யக் கூடாது, மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.