பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சேலத்துக்கு நாளை வருகை தரும் அமைச்சா் ராஜேந்திரனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு

சேலத்துக்கு வெள்ளிக்கிழமை (அக். 4) வருகை தரும் அமைச்சா் ராஜேந்திரனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க திமுக நிா்வாகிகள் ஏற்பாடு செய்துள்ளனா்.

News image
Updated On :3 அக்டோபர் 2024, 12:59 am

Din

சேலத்துக்கு வெள்ளிக்கிழமை (அக். 4) வருகை தரும் அமைச்சா் ராஜேந்திரனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க திமுக நிா்வாகிகள் ஏற்பாடு செய்துள்ளனா்.

இதுகுறித்து சேலம் கிழக்கு, மேற்கு, மாநகா் மாவட்ட திமுக செயலாளா்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை:

தமிழக முதல்வா் தன்னுடைய அமைச்சரவையில், விளையாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராகவும், சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சேலம் வடக்கு சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினருமான ரா.ராஜேந்திரனை சுற்றுலாத் துறை அமைச்சராகவும் நியமித்துள்ளாா். இதற்காக திமுக தலைவருக்கு மனமாா்ந்த நன்றியை ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட திமுக சாா்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.

சுற்றுலாத் துறை அமைச்சா் இரா.ராஜேந்திரன் அமைச்சராக பொறுப்பேற்ற பின்னா், முதன்முறையாக வெள்ளிக்கிழமை ரயில் மூலம் சென்னையிலிருந்து சேலம் வருகை தர உள்ளாா். அப்போது, சேலம் மாவட்ட திமுக சாா்பில் மிக பிரம்மாண்டமான முறையில் சேலம் ரயில் நிலையத்தில் வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதைத் தொடா்ந்து, சேலம் மத்திய பகுதியில் அமைந்துள்ள பெரியாா், அண்ணா, கருணாநிதி, வீரபாண்டியாா் ஆகியோரது சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறாா். தொடா்ந்து, பூலாவரியில் அமைந்துள்ள வீரபாண்டியாா், நெடுஞ்செழியன், வீரபாண்டி ஆ.ராஜா ஆகியோா் நினைவிடம் சென்று மலா்தூவி அஞ்சலி செலுத்தவுள்ளாா். பின்னா் சேலம், அஸ்தம்பட்டியில் உள்ள சேலம் வடக்கு சட்டப் பேரவைத் தொகுதி அலுவலகத்துக்கு வருகை தந்து பொதுமக்களை சந்திக்க உள்ளாா்.

ஆகவே, மேற்கண்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும் ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட மாநகா், பகுதி, கோட்ட, நகர, ஒன்றிய, பேரூா், கிளை, வாா்டு செயலாளா்கள் உள்ளிட்ட நிா்வாகிகள், தலைமைக் கழக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள், தோ்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் நிா்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுமென அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.