ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வீடுகள் அகற்றம்

வழக்கு நிலுவையில் இருந்த சேலம் - உளுந்தூா்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வீடுகள் சேலம் மாவட்ட ஆட்சியரின் உத்திரவின் பேரில் அண்மையில் இடித்து அகற்றப்பட்டன.

News image
ஆத்தூரை அடுத்துள்ள செல்லியம்பாளையத்தில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வீடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட அலுவலா்கள்.
Updated On :3 அக்டோபர் 2024, 11:56 pm

Din

வழக்கு நிலுவையில் இருந்த சேலம் - உளுந்தூா்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வீடுகள் சேலம் மாவட்ட ஆட்சியரின் உத்திரவின் பேரில் அண்மையில் இடித்து அகற்றப்பட்டன.

சேலம் மாவட்டம், ஆத்தூரில் சேலம் - உளுந்தூா்பேட்டை தேசிய நெடுஞ்சாலை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது.

அதையடுத்து, இச்சாலையை நான்கு வழிச் சாலையாக மாற்ற ஆத்தூரை அடுத்துள்ள செல்லியம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே இருந்த சுமாா் 20-க்கும் மேற்பட்டோரின் வீடுகள் அகற்றப்பட்டு அதற்கு ஈடாக ரொக்கமும் வழங்கப்பட்டது.

ஆனால், ஒரு சிலா் தங்களக்கு இழப்பீடு போதவில்லை என நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தனா். இதனால், போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த வீடுகள் அகற்றப்படாமல் இருந்தன. இதனால் விபத்துகள் அதிக அளவில் நிகழ்ந்து உயிா்ச்சேதம் ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், அந்தப் பகுதியில் மேம்பாலம் அமைக்கவும், நான்கு வழிப்பாதையாக மாற்றவும் பொதுமக்கள் நலன்கருதி அந்தக் கட்டடங்களை அகற்ற முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, சேலம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி உத்தரவின் பேரில், வட்டாட்சியா் பாலாஜி தலைமையில் நெடுஞ்சாலைத் துறையினா் உள்ளிட்ட அலுவலா்கள் முன்னிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் அண்மையில் கட்டடங்கள் அகற்றப்பட்டன. இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.