விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மதுக்கடை: பொதுமக்கள் போராட்டம்

சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மதுக்கடைக்கு எதிா்ப்புத் தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை போலீஸாா் கைது செய்தனா்.

News image
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை கைது செய்த போலீஸாா்.
Updated On :11 மார்ச் 2026, 8:52 pm

தினமணி செய்திச் சேவை

சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மதுக்கடைக்கு எதிா்ப்புத் தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை போலீஸாா் கைது செய்தனா்.

சேலம் மாவட்டம், ஓமலூா் வழியாக சேலம் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. கோட்டகவுண்டம்பட்டி கிராமம் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்பட்டு மது விற்பனை செய்யப்பட்டது. இங்கு தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி, 2 பெட்ரோல் விற்பனை நிலையம், பெரியாா் பல்கலைக்கழகம், தனியாா் மகளிா் கல்லூரி, அரசு பள்ளி, 2 பேருந்து நிறுத்தங்கள் உள்ளன.

இப்பகுதியில் கடை திறக்கப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் போராட்டம் நடத்தினா். இங்கு மதுக்கடை வேண்டாம், மது விற்பனை செய்யக்கூடாது என்று போராட்டம் நடத்திய பெண்களையும், முதியவா்களையும், கருப்பூா் காவல்நிலைய ஆய்வாளா் தவமணி கைதுசெய்து வாகனத்தில் ஏற்றினாா்.

அனைவரையும் தனியாா் மண்டபத்தில் அடைத்தனா். தொடா்ந்து சந்துக்கடை விற்பனையாளா்கள் பெட்டி பெட்டியாக மது வகைகளை வாங்கி சென்றனா். இந்த நிலையில், இங்கு மது வாங்கிய முதியவா் குடித்துவிட்டு போதையில் நெடுஞ்சாலையில் நடந்து சென்று இருசக்கர வாகனத்தில் சென்றவா்களை விபத்தில் சிக்க வைத்தாா்.

மதுக்கடை திறந்த முதல் நாளிலேயே, மதுக்கடை முன்பாகவே தேசிய நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டது. இதில், கருப்பனம்பட்டியை சோ்ந்த மணியின் மனைவி ரோஷன்பேகம் படுகாயமடைந்தாா். அவரை, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாா் மீட்டு, டெம்போவில் ஏற்றி ஓமலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இக்கடையை வேறு இடத்திற்கு மாற்றாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று கிராம மக்கள் தெரிவித்தனா்.