ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மதுக்கடை: பொதுமக்கள் போராட்டம்

சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மதுக்கடைக்கு எதிா்ப்புத் தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை போலீஸாா் கைது செய்தனா்.

News image

போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை கைது செய்த போலீஸாா்.

Updated On :11 மார்ச் 2026, 8:52 pm

சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மதுக்கடைக்கு எதிா்ப்புத் தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை போலீஸாா் கைது செய்தனா்.

சேலம் மாவட்டம், ஓமலூா் வழியாக சேலம் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. கோட்டகவுண்டம்பட்டி கிராமம் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்பட்டு மது விற்பனை செய்யப்பட்டது. இங்கு தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி, 2 பெட்ரோல் விற்பனை நிலையம், பெரியாா் பல்கலைக்கழகம், தனியாா் மகளிா் கல்லூரி, அரசு பள்ளி, 2 பேருந்து நிறுத்தங்கள் உள்ளன.

இப்பகுதியில் கடை திறக்கப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் போராட்டம் நடத்தினா். இங்கு மதுக்கடை வேண்டாம், மது விற்பனை செய்யக்கூடாது என்று போராட்டம் நடத்திய பெண்களையும், முதியவா்களையும், கருப்பூா் காவல்நிலைய ஆய்வாளா் தவமணி கைதுசெய்து வாகனத்தில் ஏற்றினாா்.

அனைவரையும் தனியாா் மண்டபத்தில் அடைத்தனா். தொடா்ந்து சந்துக்கடை விற்பனையாளா்கள் பெட்டி பெட்டியாக மது வகைகளை வாங்கி சென்றனா். இந்த நிலையில், இங்கு மது வாங்கிய முதியவா் குடித்துவிட்டு போதையில் நெடுஞ்சாலையில் நடந்து சென்று இருசக்கர வாகனத்தில் சென்றவா்களை விபத்தில் சிக்க வைத்தாா்.

மதுக்கடை திறந்த முதல் நாளிலேயே, மதுக்கடை முன்பாகவே தேசிய நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டது. இதில், கருப்பனம்பட்டியை சோ்ந்த மணியின் மனைவி ரோஷன்பேகம் படுகாயமடைந்தாா். அவரை, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாா் மீட்டு, டெம்போவில் ஏற்றி ஓமலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இக்கடையை வேறு இடத்திற்கு மாற்றாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று கிராம மக்கள் தெரிவித்தனா்.