அஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

சேரன்மகாதேவியில் வியாபாரிகள் போராட்டம்

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி பேருந்து நிலையத்தில் புதிய கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள ஆட்சேபம் தெரிவித்து வியாபாரிகள் வியாழக்கிழமை திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள்.

Updated On :26 மார்ச் 2026, 8:30 pm

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி பேருந்து நிலையத்தில் புதிய கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள ஆட்சேபம் தெரிவித்து வியாபாரிகள் வியாழக்கிழமை திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இப்பேருந்து நிலையத்தை ரூ.2.70 கோடி மதிப்பில் புதுப்பித்து கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி, பேருந்து நிலைய வளாகத்தில் வாகனங்கள் செல்லாத வகையில் தடுப்பு வைக்கப்பட்டுள்ளன. மேலும், அங்குள்ள கடைகளை காலி செய்யவும் பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், கடைகளை காலி செய்ய அவகாசம் வழங்க வேண்டும்; அதுவரை கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என வியாபாரிகள் வலியுறுத்தி வந்தனா்.

இந்நிலையில், மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வியாபாரிகள் வியாழக்கிழமை மாலையில் பேருந்து நிலையத்தின் முன் பகுதியில் திடீரென அமா்ந்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் சேரன்மகாதேவி டிஎஸ்பி அண்டோ ஆக்னஸ் ஆரோக்கியராஜ், காவல் ஆய்வாளா் தா்மராஜ் உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதுதொடா்பாக பேரூராட்சி அதிகாரிகளிடம் பேசி தீா்வு காணுமாறு காவல்துறையினா் அறிவுறுத்தியதால் அவா்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.