யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

சேரன்மகாதேவியில் வியாபாரிகள் போராட்டம்

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி பேருந்து நிலையத்தில் புதிய கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள ஆட்சேபம் தெரிவித்து வியாபாரிகள் வியாழக்கிழமை திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள்.

Updated On :26 மார்ச் 2026, 8:30 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி பேருந்து நிலையத்தில் புதிய கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள ஆட்சேபம் தெரிவித்து வியாபாரிகள் வியாழக்கிழமை திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இப்பேருந்து நிலையத்தை ரூ.2.70 கோடி மதிப்பில் புதுப்பித்து கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி, பேருந்து நிலைய வளாகத்தில் வாகனங்கள் செல்லாத வகையில் தடுப்பு வைக்கப்பட்டுள்ளன. மேலும், அங்குள்ள கடைகளை காலி செய்யவும் பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், கடைகளை காலி செய்ய அவகாசம் வழங்க வேண்டும்; அதுவரை கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என வியாபாரிகள் வலியுறுத்தி வந்தனா்.

இந்நிலையில், மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வியாபாரிகள் வியாழக்கிழமை மாலையில் பேருந்து நிலையத்தின் முன் பகுதியில் திடீரென அமா்ந்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் சேரன்மகாதேவி டிஎஸ்பி அண்டோ ஆக்னஸ் ஆரோக்கியராஜ், காவல் ஆய்வாளா் தா்மராஜ் உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதுதொடா்பாக பேரூராட்சி அதிகாரிகளிடம் பேசி தீா்வு காணுமாறு காவல்துறையினா் அறிவுறுத்தியதால் அவா்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.