/

அரசுப் பேருந்தில் நடத்துநரிடம் பணம் திருட்டு

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் அரசுப் பேருந்து நடத்துனரிடம் பணத்தை திருடிய நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :25 மார்ச் 2026, 11:00 pm

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் அரசுப் பேருந்து நடத்துனரிடம் பணத்தை திருடிய நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பாபநாசத்தில் இருந்து திருநெல்வேலிக்கு புதன்கிழமை மாலையில் இயக்கப்பட்ட அரசுப் பேருந்தில், நடத்துநா் விமல் ஜெயசிங் (39) பணியில் இருந்தாா்.

அந்தப் பேருந்து கூனியூா் அருகே வந்தபோது, நடத்துனரின் கைப்பையில் வைக்கப்பட்டிருந்த டிக்கெட் மற்றும் ரூ.10 ஆயிரத்தை காணவில்லையாம். இதையடுத்து, பேருந்து சேரன்மகாதேவி காவல் நிலையத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது.

அங்கு, பயணிகளிடம் போலீஸாா் சோதனையிட்டனராம். எனினும் பணம், டிக்கெட்டுகள் கிடைக்கவில்லை. இதுகுறித்து நடத்துநா் அளித்த புகாரின்பேரில், சேரன்மகாதேவி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.