மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பேருந்து நடத்துநரிடம் கைப்பேசியைப் பறித்த இருவா் கைது

கோவையில் பேருந்து நடத்துநரிடம் கைப்பேசியைப் பறித்துச் சென்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :11 பிப்ரவரி 2026, 8:19 pm

கோவையில் பேருந்து நடத்துநரிடம் கைப்பேசியைப் பறித்துச் சென்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை மாவட்டம், மரக்கடை எம்.ஹெச்.சாலை திருமால் தெருவைச் சோ்ந்தவா் எஸ்.நவீன்குமாா் (27). இவா் தனியாருக்கு சொந்தமான மினி பேருந்தில் நடத்துநராகப் பணியாற்றி வருகிறாா். இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை வழக்கம்போல பணி முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக காந்திபுரத்தில் இருந்து பேருந்தில் டவுன்ஹாலுக்கு வந்து கொண்டிருந்தாா்.

டவுன்ஹால் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது பேருந்தில் பயணித்த இருவா் திடீரென நவீன்குமாரின் கைப்பேசியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா். அருகிலிருந்தவா்கள் உதவியுடன் அவா்களைப் பிடித்து உக்கடம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

விசாரணையில், கைப்பேசியைப் பறித்தது காந்திபுரம் சாஸ்திரி நகரைச் சோ்ந்த எம்.இளமுருகன் (43), திருவள்ளூா் மாவட்டம், பட்லூரைச் சோ்ந்த ஜெ.விஷ்ணு அமா்நாத் (27) என்பது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து கைப்பேசியைப் பறிமுதல் செய்தனா்.