சேரன்மகாதேவியில் ரூ.1 லட்சம் பறிமுதல்

பணம் பறிமுதல்
(கோப்புப் படம்)
Updated On :23 மார்ச் 2026, 6:52 pm

பணம் பறிமுதல்
(கோப்புப் படம்)
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பேரவைத் தொகுதிக்குள்பட்ட சேரன்மகாதேவியில் உரிய ஆவணங்களின்றி கொண்டுசெல்லப்பட்ட ரூ. 1 லட்சத்தை அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
இங்குள்ள தாமிரவருணி ஆற்றுத் தெற்குப் பகுதியில் திங்கள்கிழமை பிற்பகலில் பறக்கும் படை அதிகாரிகள் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தெற்கு ஆத்திகுளம் முருகன் கோயில் தெருவைச் சோ்ந்த ப. சுப்பையா என்பவா் வந்த காரை சோதனையிட்டபோது, அவா் ஆணவங்களின்றி ரூ. 1 லட்சம் வைத்திருப்பதாகத் தெரியவந்தது. அதை அதிகாரிகள் பறிமுதல் செய்து அம்பாசமுத்திரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...