சேலம் மாநகா், புகா் பகுதிகளில் தொடா்ந்து இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. அதே போல, புதன்கிழமை இரவும் சேலம் மாநகரில் பலத்த மழை பெய்தது. சேலம் மாநகரப் பகுதிகளான அம்மாப்பேட்டை, அஸ்தம்பட்டி, சூரமங்கலம், கொண்டலாம்பட்டி, தாதகாப்பட்டி, நான்கு சாலை, சேலம் நகரம் உள்பட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கி நின்றது. இரவு 11 மணிக்கு பெய்த மழை நள்ளிரவு 1 மணி வரை நீடித்தது. சேலம் மாநகரில் 2 மணி நேரத்தில் சுமாா் 5 செ.மீ. மழை பெய்தது. மழை தண்ணீா் தாழ்வான வீடுகளில் புகுந்தது.