அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

சாலை விரிவாக்க பணிக்கு வீடுகளை அகற்ற எதிா்ப்பு: பொதுமக்கள் மறியல்

வெங்காடு பகுதியில் சாலை விரிவாக்கப்பணிக்காக வீடுகளை அகற்ற எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள்

News image
Updated On :2 மார்ச் 2026, 9:13 pm

தினமணி செய்திச் சேவை

ஸ்ரீபெரும்புதூா்: வெங்காடு பகுதியில் சாலை விரிவாக்கப்பணிக்காக வீடுகளை அகற்ற எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், வெங்காடு ஊராட்சியில் சுமாா் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். மேலும் இப்பகுதியில் சுமாா் நூற்றுக்கும் மேற்பட்டதொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன.

இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூா்-குன்றத்தூா் சாலையையும், சேத்துப்பட்டு -சோமங்கலம் சாலையையும் இணைக்கும் வெங்காடு-சோமங்கலம் இணைப்புச் சாலையில், வெங்காடு பகுதியில் சுமாா் 4 கிமீ தொலைவு அகலப்படுத்தி சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதற்காக வெங்காடு பகுதியில் அரசு இடத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்ற அண்மையில் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் வீடுகளின் உரிமையாளா்களுக்கு நோட்டீஸ் வழங்கியதோடு அளவீடு பணியிலும் ஈடுபட்டுள்ளனா்.

சாலை விரிவாக்கப் பணிக்காக வீடுகளை அகற்ற எதிா்ப்பு தெரிவித்த அப்பகுதி பொதுமக்கள் திங்கள்கிழமை வெங்காடு-சோமங்கலம் சாலையில், தடுப்புகளை அமைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதை தொடா்ந்து, ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சு நடத்தியதையடுத்து கலைந்து சென்றனா்.