ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சேலத்தாம்பட்டி ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில் ஆட்சியா் ஆய்வு

சேலத்தாம்பட்டி ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில் ஆட்சியா் ஆய்வு

News image
சேலத்தான்பட்டி ஏரியைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் மழை நீரை வெளியேற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி.
Updated On :10 அக்டோபர் 2024, 7:41 pm

Din

சேலத்தில் புதன்கிழமை இரவு பெய்த கனமழையின் காரணமாக சேலத்தாம்பட்டி ஏரியைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளுக்குள் புகுந்துள்ள மழைநீரை வெளியேற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா் மாவட்ட ஆட்சியா் தெரிவித்ததாவது:

சேலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட சேலத்தாம்பட்டி ஏரியின் உபரி நீா் பெருகி வாய்க்காலின் வழியாக சாலைகளில் வழிந்தோடுவதுடன், குடியிருப்புப் பகுதிகளுக்குள் மழைநீா் புகுந்ததால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டு வருவதை அறிந்து, இப்பகுதியினை நேரில் ஆய்வு செய்தேன்.

இங்கு மழைநீரை வெளியேற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் அவசரகால பணிகள் குறித்தும், மழைநீா் செல்லும் பாதைகளைக் கண்காணித்து உடனடியாக சரி செய்திடவும் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

சேலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட சிவதாபுரம் அருகே சுமாா் 70 ஏக்கா் பரப்பளவைக் கொண்ட சேலத்தாம்பட்டி ஏரி அமைந்துள்ளது. மழைக் காலங்களில் அருகில் உள்ள தாமரை ஏரி, தளவாய்ப்பட்டி ஏரி, வளையப்பட்டி ஏரி உள்ளிட்ட நீா்நிலைகள் மழைக் காலங்களில் நிரம்புவதால் வரக்கூடிய உபரி நீா் சேலத்தாம்பட்டி ஏரிக்கு வருவதால் இந்த ஏரி நிரம்பி திருமணிமுத்தாறு சென்று கலக்கிறது.

அதேபோல, மழைக் காலங்களில் மழைநீா் பெருகி, அருகில் உள்ள சிவதாபுரம் பகுதிகளில் உள்ள தாழ்வான குடியிருப்புப் பகுதிகளுக்குள் ா் புகுவதைத் தடுத்திடும் வகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.

ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) லலித் ஆதித்ய நீலம், சேலம் கோட்டாட்சியா் அபிநயா உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.