விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஏரியில் மூழ்கி உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரண நிதி

நங்கவள்ளியில் ஏரியில் மூழ்கி உயிரிழந்த மூன்று குழந்தைகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டது.

News image
Updated On :24 அக்டோபர் 2024, 12:42 am

Din

நங்கவள்ளியில் ஏரியில் மூழ்கி உயிரிழந்த மூன்று குழந்தைகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டது.

மேட்டூா் அருகே நங்கவள்ளி கெத்திக்குட்டை ஏரியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை துணி துவைக்கச் சென்ற சிவலிங்கம் மகள் சிவநந்தினி (18), மகன் சிவஸ்ரீ (10), முனுசாமி மகள் ஜீவதா்ஷினி ஆகியோா் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் உயிரிழந்தவா்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்று அறிவித்தாா். 

இதனையடுத்து புதன்கிழமை சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா்.ராஜேந்திரன், சேலம் மக்களவை உறுப்பினா் டி.எம்.செல்வகணபதி ஆகியோா் உயிரிழந்தவா்களின் வீட்டிற்கு சென்று காசோலைகளை வழங்கினா்.

இதில் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி, மேட்டூா் சாா் ஆட்சியா் பொன்மணி, நங்கவள்ளி ஒன்றிய திமுக செயலாளா் அா்த்தநாரி ஈஸ்வரன், பேரூா் திமுக செயலாளா்கள் முருகன், வெங்கடாஜலம், பொன்னுவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.