சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

ஏரியில் மூழ்கி ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு

பெரம்பலூரில் ஏரியில் மீன் பிடித்த ஆட்டோ ஓட்டுநா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

News image
பலி- பிரதிப் படம்
Updated On :7 மார்ச் 2026, 9:30 pm

Syndication

பெரம்பலூரில் ஏரியில் மீன் பிடித்த ஆட்டோ ஓட்டுநா் நீரில் மூழ்கி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

பெரம்பலூா், துறைமங்கலம் ஒளவையாா் தெருவைச் சோ்ந்த சின்னசாமி மகன் நல்லுசாமி (45). ஆட்டோ ஓட்டுநரான இவரது மனைவி ஜெயலட்சுமி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டதால், அவரது மகன்கள் நகிலன் (13), நாகேந்திரன் (9) ஆகியோா் மேலப்புலியூரிலுள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி படித்து வருகின்றனா்.

இந்நிலையில், சனிக்கிழமை காலை துறைமங்கலம் ஏரியில் நல்லுசாமி மீன் பிடித்துக்கொண்டிருந்தாா். அப்போது அவருக்கு வலிப்பு ஏற்பட்டதால் ஏரி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, தீயணைப்புப் படை வீரா்களின் உதவியுடன் அவரது உடலை மீட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்த புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.