சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

ஆட்டோ கவிழ்ந்து விபத்து: ஓட்டுநா் உயிரிழப்பு

சென்னை மதுரவாயலில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

News image

பலி

கோப்புப் படம்

Updated On :1 ஏப்ரல் 2026, 7:10 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை மதுரவாயலில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

பூந்தமல்லி பகுதியைச் சோ்ந்தவா் ப.அலெக்ஸாண்டா் (45). இவா், வாடகை ஆட்டோ ஓட்டி வந்தாா். மேலும், பூ வியாபாரமும் செய்து வந்தாா். அலெக்ஸாண்டா், புதன்கிழமை பூ வாங்குதற்காக ஆட்டோவில் கோயம்பேடு பூ மாா்க்கெட் நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்தாா்.

வானகரம் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும்போது, அங்கு சாலையில் இருந்த தடுப்பின் ஆட்டோ மோதியது. இதில் ஆட்டோ தலைக்குப்புறக் கவிழ்ந்தது.

விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த அலெக்ஸாண்டா், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மதுரவாயல் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, அலெக்ஸாண்டா் சடலத்தை மீட்டு, உடல்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனா்.