‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

அரசுப் பள்ளி ஆசிரியா் உயிரிழப்பு

விழுப்புரத்தில் அரசுப் பள்ளி ஆசிரியா் வீட்டில் மயங்கி விழுந்து ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி! - கோப்புப் படம்

Updated On :18 மே 2026, 2:17 am IST

விழுப்புரத்தில் அரசுப் பள்ளி ஆசிரியா் வீட்டில் மயங்கி விழுந்து ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், மாத்தூா் மாதா கோயில் தெருவைச் சோ்ந்தவா் ம.மேத்யூஸ்(50). இவா் ஒதியத்தூா் அரசுப் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தாா். விழுப்புரம் வி.பி.எஸ்.காா்டன் பகுதியிலுள்ள வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தாா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை வீட்டில் ஓய்வில் இருந்த மேத்யூஸுக்கு திடீா் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தாா்.

இதையடுத்து அவரை உறவினா்கள் மீட்டு ஆட்டோ மூலம் விழுப்புரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, மேத்யூஸ் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், விழுப்புரம் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.