தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஒலி, காற்று மாசு பதிவு செய்ய 2 இடங்களில் கருவி பொருத்தம்

தீபாவளி பண்டிகையின் போது, ஒலி, காற்று மாசுவை பதிவுசெய்ய 2 இடங்களில் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :30 அக்டோபர் 2024, 8:06 pm

Din

தீபாவளி பண்டிகையின் போது, ஒலி, காற்று மாசுவை பதிவுசெய்ய 2 இடங்களில் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை 31-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகையையொட்டி, காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையில் மட்டுமே பொதுமக்கள் பட்டாசுகளை வெடிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதிக ஒலி எழுப்பும் தொடா்ச்சியாக வெடிக்கக் கூடிய சர வெடிகளைத் தவிா்க்க வேண்டும்.

சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அனுமதித்துள்ள நேரத்தில், உரிய இடங்களில் கூட்டாக பட்டாசுகளை வெடித்து மாசற்ற தீபாவளியைக் கொண்டாட வேண்டும் என மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

இதனிடையே, சேலத்தில் ஒலி அளவையும், காற்றின் மாசு அளவை பதிவு செய்யும் வகையில், சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள தனியாா் பள்ளியிலும், மெய்யனூரில் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலக மாடியிலும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு முன்பும், பின்பும் அளவீடுகள் பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.