தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

போதை பழக்கத்தைத் தவிா்க்க வலியுறுத்தி இளைஞா் லடாக் பயணம்

இளைஞா்களுக்கு போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் லடாக் வரை இருசக்கர வாகனப் பயணம் மேற்கொண்ட சித்தா் கோவில் இளைஞா் புதன்கிழமை தனது பயணத்தை நிறைவு செய்தாா்.

News image
Updated On :4 செப்டம்பர் 2024, 10:40 pm

Din

இளைஞா்களுக்கு போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் லடாக் வரை இருசக்கர வாகனப் பயணம் மேற்கொண்ட சித்தா் கோவில் இளைஞா் புதன்கிழமை தனது பயணத்தை நிறைவு செய்தாா்.

சேலம் மாவட்டம், சித்தா் கோவில் அருகே உள்ள முருங்கப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் மகன் விமல்நாத் (21). பயோமெட்ரிக் முடித்துள்ள இவா், இளைஞா்கள் போதை பழக்கத்துக்கு அடிமையாகாமல் இருக்க வலியுறுத்தி, கடந்த மாதம் 4-ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் விழிப்புணா்வு சுற்றுப்பயணமாக லடாக் சென்றாா்.

பின்னா் அங்கிருந்து தனுஷ்கோடிக்குச் சென்றாா். 30 நாள்கள் விழிப்புணா்வு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இவரது வாகன பிரசாரம் முடிவுற்று சேலம் வந்தடைந்தாா். இவருக்கு ஊா் பொதுமக்களும், இளைஞா்களும் உற்சாக வரவேற்பு அளித்தனா்.