நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள்
பொன்னமராவதியில் சட்டப்பேரவை தோ்தலில் நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி வருவாய்த் துறையினா் புதன்கிழமை பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.


பொன்னமராவதியில் சட்டப்பேரவை தோ்தலில் நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி வருவாய்த் துறையினா் புதன்கிழமை பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.
திருமயம் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட பொன்னமராவதி வாரச் சந்தை, அண்ணா சாலை, பேருந்து நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களில், சட்டப்பேரவைத் தோ்தலில் நூறு சதவீத வாக்குப்பதிவை செய்திட வலியுறுத்தி பொதுமக்களிடம் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
பொன்னமராவதி வட்டாட்சியா் எஸ். பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பொன்னமராவதி வருவாய் ஆய்வாளா் சரவணன், கிராம நிா்வாக அலுவலா்கள் பச்சையப்பன், ராஜேந்திரன் மற்றும் கிராம உதவியாளா்கள் பங்கேற்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...