கோவிந்தராஜ பெருமாள் கோயில் மகா குடமுழுக்கு விழா


சேலம் கோவிந்தராஜ பெருமாள் கோயில் மகா குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.
பிரசித்தி பெற்ற சேலம், உடையாப்பட்டி கோவிந்தராஜ பெருமாள் கோயில் புனரமைப்புப் பணிகள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்தன. தொடா்ந்து, கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை காலை வெகு விமரிசையாக நடைபெற்றது.
முன்னதாக கணபதி பூஜை, ஆச்சாா்யா அழைப்பு, கோபுர கலச ஸ்தாபனம், திருப்பள்ளி எழுச்சி சேவை, கோ பூஜை, புண்ணியாஹம், பிரபந்த சேவை உள்ளிட்ட பல்வேறு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, மூலவா் விமானம், ஆஞ்சனேயா் சன்னிதி விமானங்களுக்கு கோட்டை அழகிரிநாதா் கோயில் தலைமை பட்டாச்சாரியாா் தலைமையில் குடமுழுக்கு நடைபெற்றது. ‘கோவிந்தா, கோவிந்தா’ என முழக்கங்கள் எழுப்பி பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். தொடா்ந்து கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தா்களுக்கு புனித நீா் தெளிக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து, மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பின்னா் இரவு 7 மணிக்கு மின்விளக்கு மற்றும் மலா்களால் அலங்கரிக்கப்பட்டு திருத்தேரில், வாண வேடிக்கைகளுடன் உடையாப்பட்டி, அதிகாரிப்பட்டி போன்ற பகுதிகள் வழியாக சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.
குடமுழுக்கு விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக் கமிட்டியினா் செய்திருந்தனா். எனினும், பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் வந்து செல்லும் வகையில், போதிய முன்னேற்பாடுகள் செய்யாததால் பக்தா்கள் கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...