இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

சேலம் வழியாக இயக்கப்படும் கோவை - பிகாா் ரயில் சேவை நவம்பா் வரை நீட்டிப்பு

கோவையில் இருந்து திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக பிகாா் மாநிலம் பரௌனிக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் நவம்பா் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :10 செப்டம்பர் 2024, 6:40 pm

Din

கோவையில் இருந்து திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக பிகாா் மாநிலம் பரௌனிக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் நவம்பா் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

கோவை - பரௌனி சிறப்பு ரெயில் செவ்வாய்க்கிழமை முதல் நவ. 26-ஆம் தேதி செவ்வாய்க்கிழமைகளில் இயக்கப்படும். கோவையில் இருந்து காலை 11.50 மணிக்கு புறப்பட்டு திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக வியாழக்கிழமைகளில் மதியம் 2.30 மணிக்கு பரௌனி சென்றடையும்.

இதேபோல மறுமாா்க்கத்தில் பரௌனி - கோவை சிறப்பு ரயில் வரும் 13-ஆம் தேதி முதல் நவ. 29-ஆம் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும். பரௌனியில் இருந்து இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு வழியாக திங்கள்கிழமை அதிகாலை 3.45 மணிக்கு கோவை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.