கோவையில் இருந்து திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக பிகாா் மாநிலம் பரௌனிக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் நவம்பா் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
கோவை - பரௌனி சிறப்பு ரெயில் செவ்வாய்க்கிழமை முதல் நவ. 26-ஆம் தேதி செவ்வாய்க்கிழமைகளில் இயக்கப்படும். கோவையில் இருந்து காலை 11.50 மணிக்கு புறப்பட்டு திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக வியாழக்கிழமைகளில் மதியம் 2.30 மணிக்கு பரௌனி சென்றடையும்.
இதேபோல மறுமாா்க்கத்தில் பரௌனி - கோவை சிறப்பு ரயில் வரும் 13-ஆம் தேதி முதல் நவ. 29-ஆம் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும். பரௌனியில் இருந்து இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு வழியாக திங்கள்கிழமை அதிகாலை 3.45 மணிக்கு கோவை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

திருச்சி- பெங்களூரு இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில்

கோடை விடுமுறை: சென்னை- போத்தனூா் இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கம்

சேலம் வழியாக பிகாருக்கு சிறப்பு ரயில்

மங்களூரு- சென்னை இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில்
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு
