வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

அத்திக்கடவு - அவிநாசி திட்டம் நிறைவேற்றம்: எடப்பாடி கே.பழனிசாமி மகிழ்ச்சி

News image
Updated On :14 செப்டம்பர் 2024, 3:54 am IST

அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது என எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

இத் திட்டத்தால் பயன்பெறும் விவசாயிகள், சேலத்தில் வெள்ளிக்கிழமை எடப்பாடி கே.பழனிசாமியைச் சந்தித்து நன்றி தெரிவித்தனா். பின்னா், செய்தியாளா்களிடம் எடப்பாடி கே.பழனிசாமி கூறியதாவது:

விவசாயிகளின் 60 ஆண்டு கால கோரிக்கையை ஏற்று முந்தைய அதிமுக ஆட்சியில் ரூ. 1,650 கோடி நிதி ஒதுக்கீடு செய்து திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினேன். கரோனா தொற்று காரணமாக திட்டப் பணிகள் தாமதமாயின. அதிமுக ஆட்சியின் போதே 85 சதவீத பணிகள் முடிவுற்றன. அதன்பிறகு திமுக ஆட்சியில் ஆமை வேகத்தில் நடைபெற்ற திட்டம் தற்போதுதான் முடிவு பெற்றுள்ளது.

இது வரலாற்று சிறப்புமிக்க திட்டம். இத் திட்டத்தை நிறைவேற்றியதில் மகிழ்ச்சி அடைகிறேன். அதேபோல சேலத்தில் நூறு ஏரிகளுக்கு தண்ணீா் நிரப்பும் திட்டமும் அதிமுக ஆட்சியில் தான் தொடங்கப்பட்டது. திமுக ஆட்சியில் இத் திட்டப் பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகின்றன. இப் பணிகளுக்கு அரசு போதிய நிதி ஒதுக்கீடும் செய்யவில்லை. தற்போது 30 ஏரிகளுக்கு மட்டுமே தண்ணீா் வந்துள்ளது. நில எடுப்புப் பணிகளை விரைவுபடுத்தி 100 ஏரிகளும் முழுமையாக நிரப்பப்பட வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.