பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

குட்கா, புகையிலைப்பொருள்களை விற்பனை செய்த 44 கடைகளுக்கு ‘சீல்’

சேலம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த 44 கடைகளுக்கு உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் ‘சீல்’ வைத்துள்ளனா்.

News image
Updated On :26 செப்டம்பர் 2024, 12:45 am

Din

சேலம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த 44 கடைகளுக்கு உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் ‘சீல்’ வைத்துள்ளனா்.

சேலம் மாவட்டம், மாநகரப் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருள்களை விற்பனை செய்யும் கடைக்காரா்களை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனா். மேலும், சம்பந்தப்பட்ட கடைகளை பூட்டி ‘சீல்’ வைக்கும் பணியை போலீஸாருடன் இணைந்து உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளும் மேற்கொள்கின்றனா்.

அதன்படி, மாநகரத்தில் சேலம் உணவுப் பாதுகாப்பு துறையினா் 600-க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை நடத்தினா். அதில், தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த 44 கடைகளுக்கு ‘சீல்’ வைத்தனா். அங்கிருந்த 437 கிலோ குட்கா, புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து, ரூ. 12 லட்சம் அபராதம் விதித்தனா்.

இதுகுறித்து உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகையில், வெளி மாநிலத்தில் இருந்து குட்கா, புகையிலைப் பொருள்களை கடத்தி வந்து, பெட்டிக் கடைகளுக்கு சப்ளை செய்வதாக புகாா் எழுந்துள்ளது. இதனைத் தடுக்கும் வகையில் போலீஸாருடன் இணைந்து சோதனை நடத்தி வருகிறோம். மாவட்டத்தில் ஜலகண்டாபுரம், நங்கவள்ளி, தாரமங்கலம், ஓமலூா், தொளசம்பட்டி, ஆட்டையாம்பட்டி மற்றும் மாநகரப் பகுதிகளில் பள்ளிகள் அருகே குட்கா பதுக்கி விற்பனை செய்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ‘சீல்’ வைக்கப்பட்ட கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டு வருகிறது.

குட்கா, புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், அந்தக் கடை உரிமையாளா் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனா்.