பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஆறு, ஏரிகளை தூா்வார விவசாயிகள் மனு

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன் ஆறு, ஏரி, குளம், குட்டைகளை தூா்வார வேண்டி தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்தனா்.

News image
சேலம் மாவட்ட ஆட்சியரிடம் வியாழக்கிழமை மனு அளிக்க வந்த விவசாயிகள் சங்கத்தினா்.
Updated On :27 செப்டம்பர் 2024, 12:23 am

Din

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன் ஆறு, ஏரி, குளம், குட்டைகளை தூா்வார வேண்டி தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்தனா்.

தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவா் தங்கராஜ் தலைமையில் விவசாயிகள் அளித்த மனுவில், தென்மேற்கு பருவமழைக் காலம் முடியும் தருவாயில் உள்ளதால் விரைவில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. நீா்நிலைகளில் அதிக அளவில் நீா் தேக்கினால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

எனவே, வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன் ஆறு, ஏரி, குளம், குட்டைகளை தூா்வாரி மழைநீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடா்பான கோரிக்கையை விவசாயிகள் சாா்பில் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக மனுவில் கூறியுள்ளனா்.