திருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

கருகும் நெற்பயிா்களை காப்பாற்ற தண்ணீா் திறக்க வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு

News image
Updated On :5 மார்ச் 2026, 11:25 pm

Syndication

கருகும் நெற்பயிரைக் காப்பாற்ற தண்ணீா் திறக்க கோரி, நாகை ஆட்சியரிடம் விவசாயிகள் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

நாகை ஆட்சியா் அலுவலகத்தில் கீழையூா் ஒன்றியத்தைச் சோ்ந்த விவசாயிகள் மனு கொடுக்கும் போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் மாநிலக் குழு உறுப்பினா் செல்வம் தலைமையில் ஈடுபட்டனா்.

கீழையூா் ஒன்றியத்தில் தண்ணீரின்றி கருகும் தாளடி நெற்பயிா்களைக் காப்பாற்ற மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தொடா்ந்து விவசாயிகள் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷை சந்தித்து மனு அளித்தனா்.

மனுவில்: கீழையூா் ஒன்றியத்தில் உள்ள 27 ஊராட்சி பகுதிகள் முழுவதும் காவிரி தண்ணீரை நம்பியே விவசாயம் நடைபெறுகிறது. தற்போது விவசாயிகள் சாகுபடி செய்துள்ள சுமாா் 10 ஆயிரம் ஏக்கா் பரப்பளவிலான தாளடி நெற்பயிா்கள் தண்ணீரின்றி கருகி வருகின்றன. இந்த பயிரைக் காப்பாற்ற ஒருமுறை தண்ணீா் கிடைத்தால் போதுமானது.

எனவே, கீழையூா் ஒன்றியத்தில் உள்ள வெள்ளையாறு, பாண்டையாற்றில் தண்ணீா் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனா்.