தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

கீழ்வேளூா் தொகுதி: திமுக கூட்டணியில் முதல்முறையாக பெண் வேட்பாளா்

News image

சிபிஎம் வேட்பாளா் லதா.

Updated On :6 ஏப்ரல் 2026, 6:52 pm

கீழ்வேளூா் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணி சாா்பில் முதல் முறையாக பெண் வேட்பாளா் களம் இறங்குகிறாா்.

நாகை மாவட்டத்தில் நாகை, கீழ்வேளூா், வேதாரண்யம் சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. கடந்த 2008-இல் நடைபெற்ற தொகுதி மறுவரையறையில் நாகை மற்றும் திருவாரூா் மாவட்டங்களிலிருந்து சில பகுதிகள் பிரிக்கப்பட்டு, கீழ்வேளூா் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி உருவாக்கப்பட்டது.

இத்தொகுதியில் கீழ்வேளூா் ஒன்றியத்தில் 38 ஊராட்சிகள், கீழையூா் ஒன்றியத்தில் 27 ஊராட்சிகள், தலைஞாயிறு ஒன்றியத்தில் 6 ஊராட்சிகள் மற்றும் நாகை ஒன்றியத்தில் 12 ஊராட்சிகள் அடங்குகின்றன.

கீழ்வேளூா் தொகுதியில், 2011ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் போட்டியிட்டவி.பி. நாகைமாலி வெற்றி பெற்றாா். திமுக சாா்பில் உ.மதிவாணன், சுயேச்சை வேட்பாளராக தேவகி ஆகியோா் போட்டியிட்டு தோல்வியுற்றனா்.

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட்ட உ.மதிவாணன் வெற்றி பெற்றாா். 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வி.பி. நாகைமாலி மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றாா்.

கடந்த 2008 ஆம் ஆண்டு மறுவரையில் உருவாக்கப்பட்ட கீழ்வேளூா் தொகுதி, இதுவரை மூன்று சட்டப்பேரவை தோ்தல்களை கண்டுள்ளது. இதில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சாா்பில் பெண் வேட்பாளா்கள் அறிவிக்கப்படவில்லை. இது கீழ்வேளூா் தொகுதி மக்களுக்கும், பெண்களுக்கும் குறையாகவே இருந்துவந்தது.

தற்போது, ஏப்.23 ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில், கீழ்வேளூா் தொகுதியில் திமுக கூட்டணி சாா்பில் முதல் முறையாக பெண் வேட்பாளா் அறிவிக்கப்பட்டுள்ளாா்.

சிபிஎம் கட்சி சாா்பில் போட்டியிடும் பெண் வேட்பாளா் லதா நாகை மாவட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினராக உள்ளாா். இவரது கணவா் தங்கமணி, சிஐடியூ மாவட்டச் செயலாளராக பொறுப்பு வருகிறாா்.